ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்!

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 3 ஆண் குழந்தைகள்

by Radha, Jun 23, 2018, 07:59 AM IST

கோவை தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண் ஒருவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன.

Baby

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த விவேக்-வித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர்.

அதன் பலனாக வித்யாவிற்கு குழந்தை பேறு உருவானது. 3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. 3 குழந்தைகளையும் கருவில் வளர்ப்பதில் இருக்கும் சிக்கல்களை மருத்துவர்கள் தம்பதியருக்கு தெரிவித்தனர். இருந்தபோதிலும் விவேக்–வித்யா தம்பதியினர் 3 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள விரும்பினர்.

இந்நிலையில், வித்யாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர்.

பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் 3 கருக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்! Originally posted on The Subeditor Tamil

More Aval News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை