பொதுவான மொழி இருந்தால் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது.. ரஜினிகாந்த் கருத்து..

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேர மாட்டார் என்றும், தனிக்கட்சிதான் தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தும் பல மாதங்கள் ஓடிவிட்டன. இதற்கிடையே, அவர் பாஜகவின் கொள்கைகளையும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரையும் அவ்வப்போது புகழ்ந்து பேசி வருகிறார். அவர் அடுத்த மாதம் கட்சித் தொடங்கப் போவதாகவும் சமீபத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில், தர்பார் படப்பிடிப்புக்கு சென்று இன்று காலை சென்னை வந்த ரஜினிகாந்த், விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம், நாட்டின் ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டுமென்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அது வந்து.. நாட்டின் ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டு வர முடியாது.

தமிழ்நாடு மட்டுமல்ல, தென்மாநிலங்களில் யாரும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வட மாநிலங்களில் கூட பல மாநிலங்களில் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பதிலளித்தார். தொடர்ந்த மற்ற கேள்விகளுக்கு அவர் நிற்காமல், வேகமாகச் சென்று விட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds