துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம்

by Balaji, Dec 9, 2020, 16:32 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . அண்ணா பல்கலைக்கழகத்தில் இணை இயக்குனர் சக்தி நாதன் மற்றும் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது இணையதளம் மூலமாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்கள் 13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர் கல்வித்துறை தலைமைச் செயலர் நவம்பர் 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டனர்.

இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பெயரைக் களங்கப்படுத்துவதாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும், உயர் கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுதமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும் போது அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் கீழ் வராது. மேலும் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இதை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

துணை வேந்தர் சூரப்பா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் அண்ணா பல்கலைக்கழகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும் அதன் உறுப்பு கல்லூரிகள் பெரும்பாலானவை தென் தமிழகத்திலேயே அமைந்துள்ளது எனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது எனக் கூறினார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னை இந்த வழக்கில் சேர்க்கக் கூறியதை நீதிமன்றம் ஏற்கிறது. அவரை இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக நீதிமன்றம் சேர்க்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.

You'r reading துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம் Originally posted on The Subeditor Tamil

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை