`தளபதி சொன்ன அட்வைஸ்னால தான் நான் ஹீரோ - விஜய் குறித்து நெகிழும் ஜெய்!

actor Jai thanks Thalapathy Vijay

by Sasitharan, Feb 20, 2019, 18:15 PM IST

நான் ஹீரோவாக நடிப்பதற்கு காரணம் விஜய் தான் என நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் நடிகர் ஜெய் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்றில்லாமல் இரண்டு கதாநாயகர்கள் உள்ள படம், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். சில படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார். அதேநேரம் ஹீரோவாகவும் சில வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் தன் பெயரை நிலைநிறுத்தி வருகிறார். பெரிய வீட்டு வாரிசு என்றாலும் முதல்படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்காமல் பல்வேறு வேடங்களில் நடித்து தான் வந்துள்ளார்.

இவர் முதல்படமே விஜய் நடித்த `பகவதி' படம்தான். அதில் விஜய்க்கு தம்பியாக நடித்து இருப்பார். மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘மதுரராஜா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது தவிர ‘பார்ட்டி’, ‘நீயா-2’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இந்தநிலையில் தனது 25-வது படமாக ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவ்வளவு படங்கள் ஹீரோவாக நடிப்பதற்கு விஜய் தான் காரணம் கூறுகிறார் ஜெய்.

``பகவதி’ படத்துக்குப் பிறகு விஜய் சார்கிட்ட அடிக்கடி வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருந்தப்போ, `இப்படி துணை கதாபாத்திரங்கள் மட்டுமே பண்ணிக்கிட்டு இருந்தா உன்னை கடைசிவரை அந்த மாதிரிதான் வெச்சிருப்பாங்க’ன்னு சொன்னார். அவர் சொன்ன வார்த்தை தான் என்ன ஹீரோவா பண்ண வச்சது. அவர் சொன்ன பிறகு தான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சேன். ஏன் இப்போதும்கூட ஒரேமாதிரியான கேரக்டர்ல நடிக்கிறபோது, விஜய் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும்” என நெகிழ்ந்துள்ளார்.

You'r reading `தளபதி சொன்ன அட்வைஸ்னால தான் நான் ஹீரோ - விஜய் குறித்து நெகிழும் ஜெய்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை