எனக்கா ஓட்டு இல்லை போராடி உரிமையை பெற்ற சிவகார்த்திகேயன்!

SK fight for his right and finally cast his vote

by Mari S, Apr 18, 2019, 14:04 PM IST

நடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ரோபோ சங்கருக்கு பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு இல்லை என்ற செய்தி வைரலாக அனைத்து மீடியாக்கள் வாயிலாகவும் பரவின. தன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. தனக்கு ஏன் ஓட்டு இல்லை என சிந்தித்த சிவகார்த்திகேயன், தன்னுடைய ஜனநாயக கடமையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காலை 8 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்தார். ஆனால், பூத் எண் 303-ல் அவரது பெயர் இல்லாததால் சிவகார்த்திகேயன் ஓட்டுப் போட முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அங்கிருந்த மற்றொரு பூத் எண்ணில் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அனைத்தையும் ஆராய்ந்து தனது பெயர் இருக்கும் பூத் எண்ணை கண்டறிந்த சிவகார்த்திகேயன், சற்று முன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

உங்கள் உரிமைக்காக போராடுங்கள்.. ஓட்டுப் போட போங்க என சிவகார்த்திகேயன் மை விரலோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You'r reading எனக்கா ஓட்டு இல்லை போராடி உரிமையை பெற்ற சிவகார்த்திகேயன்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை