படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..

Actress Andrea Jeremiah worried about film offer

by Chandru, Oct 15, 2019, 15:59 PM IST

இயக்குனர் கவுதம் மேனனால் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுக மானவர் ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் மற்ற நடிகைகள்போல் ஆண்ட்ரியா வுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. நடிப்பை தவிர பாடகியாகவும் பல படங்களில் தன் குரலை பதிவு செய்திருப்பதுடன் இசை ஆல்பமும் வெளியிட்டிருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் வராதது கவலை அளித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது,'எனக்கு நடிப்பும், பாட்டும் இரண்டு கண்கள். இதுதான் பிடிக்கும் என்று பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் ஒரு வருத்தம் இருக்கிறது. இந்த வருடம் நடிகையாக எனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. பாடகியாக மட்டும்தான் இருக்கிறேன். தேடி வந்த சில படங்களையும் கதை சரியில்லை என்று ஏற்க மறுத்துவிட்டேன்' என்றார் ஆண்ட்ரியா.

புதியபட வாய்ப்புகளை பெறுவதற்காக தனது புதிய தோற்றத்தை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்து நெட்டில் வெளியிட்டு ரசிகர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

You'r reading படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை