பிரிந்து வாழும் கமல்- சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்? நடிகையும் மகளுமான சுருதி ஒபன் டாக்...
Shruti Haasan on parents Kamal and Sarikas divorce
கமல்ஹாசன் சரிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அக்ஷராவும் நடிகையாக உள்ளார். ஆனாலும் கமலும் சரிகாவும் பல வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடுஏற்பட்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர். சரிகா கமலை விட்டுபிரிந்து மும்பையில் வாழ்கிறார்.
தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-
எனது வாழ்க்கையில் மிக முக்கிய பாகம் என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இருக்கும். என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.
ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த விஷயமாகும்.
அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்னைகள் உருவாகியது. என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
இவ்வாறு வெளிப்படையாக தனது பெற்றோர் பிரிந்திருப்பதற்கான காரணத்தை ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
இவ்வாறு வெளிப்படையாக தனது பெற்றோர் பிரிந்திருப்பதற்கான காரணத்தை ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
You'r reading பிரிந்து வாழும் கமல்- சரிகாவை சேர்த்து வைக்காதது ஏன்? நடிகையும் மகளுமான சுருதி ஒபன் டாக்... Originally posted on The Subeditor Tamil
More Cinema News
READ MORE ABOUT :