விஸ்கி கோப்பையால் தயாரிப்பாளரை தாக்கிய நடிகை.. போலீசில் புகாரால் பரபரப்பு..

by Chandru, Dec 29, 2019, 17:51 PM IST

தமிழில் இளம் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நிக்கி கல்ராணி. அவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர், தமிழில் ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர். கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

பெங்களூரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டிக்கு சஞ்சனா கல்ராணி சென்றார். அதே நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வந்தனா கலந்து கொண்டார். அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. சஞ்சனா அங்கிருந்த விஸ்கி கோப்பையை எடுத்து வந்தனா மீது வீசினாராம். இதுகுறித்து பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் வந்தனா.

அதேபோல் வந்தனா மீது சஞ்சனாவும் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட சஞ்சனா, வந்தனாவும் நானும் தோழிகள் இப்போது பிரிந்துவிட்டோம். நடந்த சம்பவத்தை எனது சகோதரர் வீடியோவாக பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
சஞ்சனா அடுத்து பாக்ஸர் என்ற படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகிறார்.

You'r reading விஸ்கி கோப்பையால் தயாரிப்பாளரை தாக்கிய நடிகை.. போலீசில் புகாரால் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை