இளையராஜா முதன்முறையாக வீட்டில் இசை அமைத்தார்.. பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறுகிறாரா?

by Chandru, Jan 6, 2020, 19:35 PM IST

இசைஞானி இளையராஜா 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில்தான் அலுவலகம் அமைத்து இசை அமைத்து வந்தார். இந்நிலையில் பிரசாத்திலிருந்து அவரை அந்நிறுவனம் வெளியேற சொல்லி உல்ளது. அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக தனது வீட்டில் புதிய படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கி றார் இளையராஜா.

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் படம் தமிழரசன். சோனு சூட், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். முதன்முறையாக இப்படத்துக்கு தனது வீட்டில் வைத்து பின்னணி இசை அமைத்தி ருக்கிறார் இளையராஜா.

தான் இசை அமைக்கும் படங்களுக்கு அதிகம் கம்ப்யூட்டர் கீபோர்டை பயன்படுத்தாமல் ஒரிஜினல் இசை கலைஞர்களையே இலையராஜா பயன்படுத்துவது வழக்கம். அதன்படி ஒட்டு மொத்த இசை கலைஞர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசை அமைத்தார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா இப்படத்தை ராணி தயாரிக்கிறார்.

வீட்டிலேயே இசை அமைக்கும் பணியை இளையாராஜா மேற்கொண்டதால் அவர் பிரசாத் ஸ்டியோவிலிருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You'r reading இளையராஜா முதன்முறையாக வீட்டில் இசை அமைத்தார்.. பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறுகிறாரா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை