நடன இயக்குனர் மீது போலீஸ் வழக்கு பதிவு... கைது நடவடிக்கையா..?

by Chandru, Feb 6, 2020, 19:04 PM IST

ரவுத்திரம் திரைப்படத்தில் ஜீவாவுக்கு வில்லனாக நடித்தவர் கணேஷ் ஆச்சார்யா. நடன இயக்குனரான இவர் பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகைகள் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார். கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.

அதில், தனக்கு கணேஷ் ஆச்சார்யா பாலியல் ரீதியாக தொல்லை தந்தார். எப்போது அவரை பார்க்கச் சென்றாலும் ஆபாச படத்தை போட்டுக்காட்டி என்னை பார்க்க வற்புறுத்துவார். அது எனக்கு பிடிக்கவில்லை. மேலும் அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் என்னை மிரட்டினார்கள். சினிமாவுலகில் பதவியில் இருப்பதால் அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு வரும் பட வாய்ப்புகளையும தட்டி பறிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
பெண் நடன கலைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ் ஆசார்யா மீது போலீஸார் வழக்குபதிவு செய்திருக்கின்றனர். பாலியல் தொல்லை, பெண்களை ஆபாசமாக படம் எடுத்தல், பெண்களை பின்தொடர்வது, அச்சுறுத்துவது உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் கணேஷ் ஆசார்யா மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட லாம் என்று திரையுலகில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.

You'r reading நடன இயக்குனர் மீது போலீஸ் வழக்கு பதிவு... கைது நடவடிக்கையா..? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை