ஶ்ரீதேவி இறுதிச்சடங்கில் சிரித்துக்கொண்டிருந்த நடிகை!- காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்

by Rahini A, Mar 1, 2018, 20:59 PM IST

நடிகை ஶ்ரீதேவியின் இறுதிச்சடங்கின் போது சிரித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படம் வைரலாகப் பரவியதையடுத்து நாடு முழுவதும் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

நடிகை ஶ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நேற்று மும்பையில் நடைபெற்றது. லோக்கந்துவாலா விளையாட்டு மையத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரையில் உள்ள முக்கியத் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் சிரித்தபடி நிற்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் புகைப்படத்துக்கு தேசிய அளவில் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றன. 'ஒரு துக்க வீட்டுக்கு உண்மையில் மரியாதை செலுத்த வேண்டும் என சென்றிருந்தால் ஜாக்குலின் இதுபோல் செய்திருக்கமாட்டார்.

பெயருக்கென மீடியா வெளிச்சத்தில் விழ வேண்டும் என்பதற்காகவே ஜாக்குலின் ஶ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார்' என நாடு முழுவதும் நெட்டிசன்கள் நடிகை ஜாக்குலினைக் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

You'r reading ஶ்ரீதேவி இறுதிச்சடங்கில் சிரித்துக்கொண்டிருந்த நடிகை!- காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை