சேதுவின் உடலை மயானத்துக்கு சுமந்த சந்தானம்..

Santhanam Attends His Friend DR. Sethus Funeral

by Chandru, Mar 28, 2020, 16:40 PM IST

காடுவரை நண்பன்..

வீடு வரை உறவு என்று பாடலை தொடங்கி காடுவரை பிள்ளை என எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். தற்போது காடுவரை நண்பன் என்று புதிய உறவை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சந்தானம்.நேற்று முன்தினம் நடிகர் சேது மாரடைப்பில் மரணம் அடைந்தார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். கண்ணா லட்டு திண்ண ஆசையா. வாலிப ராஜா படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். சேது மரணச் செய்தி அறிந்ததுமே அதிர்ச்சி அடைந்த சந்தானம் மன அழுத்தத்தில் ஆழ்ந்ததாக தெரிவித்திருந்தார். உடனடியாக சேதுவின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அவர் உடலைப் பார்த்து கண்ணீர் சிந்தினார். சேது இறந்துவிட்டானா நம்பவே முடியவில்லை என்றபடி சோகத்தில் ஆழ்ந்தார். பின்னர் சேதுவின் உடலைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லும்போது அவரது உடலை தன் தோளில் சுமந்தார் சந்தானம். இக்காட்சி அங்கிருந்தவர்களை உருக்கத்தில் ஆழ்த்தியது.

You'r reading சேதுவின் உடலை மயானத்துக்கு சுமந்த சந்தானம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை