ஹிப் ஹாப் ஆதி காலையில் எழுந்து என்ன செய்கிறார்?
Actor Aadhi whats Doing on Quarantine
டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் சினிமா ஹீரோ ஆனதுபோல் யூ டியூ பிலிருந்து சினிமாவில் ஹீரோ ஆனவர் ஹிப் ஹாப் ஆதி. கொரோனா ஊரடங்கால் தனிமையிலிருக்கும் அவர் கூறியதாவது: காலை 5 மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து விடுகிறேன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் தூங்கச் சென்று விடுகிறேன். அதன் பிறகு இணைய தளத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறேன்' என்றார்.
ஹிப் ஹாப் ஆதி சமீபத்தில் வீட்டிலிருந்தபடியே கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டார். கடந்த மாதம் அவர் நடித்த நான் சிரித்தால் படம் திரைக்கு வந்தது. எந்த நேரமும் அவர் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்திருந்தார். இத்தனை நாள் ஆகியும் அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியே வரமுடியாமல் தூக்கத்திலும் அவர் சில சமயம் சிரித்துக் கொண்டிருக்கிறாராம்.
You'r reading ஹிப் ஹாப் ஆதி காலையில் எழுந்து என்ன செய்கிறார்? Originally posted on The Subeditor Tamil
More Cinema News