கொரோனாவிலிருந்து மீண்டார் கனிகா கபூர்.. 5 முறைதொற்று பாசிட்டிவாக இருந்தவர்..

Singer Kanika Kapoor finally recovers from Covid-19

by Chandru, Apr 6, 2020, 16:15 PM IST

லக்னோவைச் சேர்ந்தவர் பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று மறுத்து வந்தார்.

ஆனாலும் அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். 5 முறை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 5 முறையும் டெஸ்ட் பாஸிட்டிவாகவே வந்தது. தீவிர சிகிச்சை சிகிச்சைக்குப் பிறகு உடல் நலன் தேறினார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு இரண்டு நாட்கள் வைரஸ் தொற்று பரிசோதனை நடத்திய போது இரண்டு முறையும் நெகடிவ் என்று ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து கனிகா கபூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் அவரை தனிமையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

You'r reading கொரோனாவிலிருந்து மீண்டார் கனிகா கபூர்.. 5 முறைதொற்று பாசிட்டிவாக இருந்தவர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை