ஜோதிகா பேச்சில் உறுதியாக நிற்கிறோம்.. நடிகர் சூர்யா அறிக்கை..
surya statement on jothika speech
விழா ஒன்றில் கோவில்கள் கட்டுவதை விடப் பள்ளிகளைக் கட்ட உதவுங்கள் என்றார். அது சர்ச்சையானது. இது பற்றி நடிகர் சூர்யா அளித்துள்ள அறிக்கை வருமாறு:மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியிருக்கிறது கோயில்களை போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதைச் சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள்.
இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்திலும் எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதே எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர விரும்புகிறோம்.
தவறான நோக்கத்தோடு தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்குத் துணை நிற்கிறார்கள். முகம் அறியாத எத்தனையோ பேர் பதிலளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் சர்ச்சையைக் கையாண்டனர். நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு சூர்யா அறிக்கையில் கூறியுள்ளார்.
You'r reading ஜோதிகா பேச்சில் உறுதியாக நிற்கிறோம்.. நடிகர் சூர்யா அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News