மதுக் கடைகளை திறக்காதீங்க.. அரசுக்கு இயக்குனர் வேண்டுகோள்..

do not open TASMAC director request TM Govt.

by Chandru, May 5, 2020, 16:44 PM IST

தூங்கா நகரம். சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில்.மே7ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு நாளில் மற்ற மாநில அரசுகள் செய்யும் தவறை தமிழக அரசும் செய்ய வேண்டுமா? சிவப்பு மண்டலத்தில் திறக்கப்போவதில்லை என்கிறார்கள். பார்டர் தாண்டி செல்லும் குடிமகன்களுக்குத் தெருக்களைத் தாண்டி சென்று குடிக்கத் தெரியாதா? தமிழ்நாடு முழுவதையும் மூடுவதற்குத் தான் மதுக்கடை திறப்பு வழி செய்யும் .

ஏற்கனவே வேலையில்லாமல் உணவுக்குக் கஷ்டப்படும் மக்கள் எப்படிப் பணம் கொடுத்து மது வாங்கமுடியும். சமூக ஆர்வலர்கள் உணவு தந்து உதவுகிறார்கள் அவர்களையே மது வாங்கி தரச் சொல்கிறீர்களா? இதனால் குற்றங்கள் எண்ணிக்கை தான் பெருகும். தயவு செய்து மதுக் கடைகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டுகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading மதுக் கடைகளை திறக்காதீங்க.. அரசுக்கு இயக்குனர் வேண்டுகோள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை