திரிஷாவுக்கு இரட்டை குழந்தை..! சிம்பு போனில் உரையாடியபோது அம்பலம்..

Simbus Karthik Dial Seytha Yenn released

by Chandru, May 21, 2020, 20:23 PM IST

திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். இது கொரோனா ஊரடங்கில் கவுதம்மேனன் இயக்கியுள்ள கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் வரும் கார்த்தி (சிம்பு), ஜெசி(திரிஷா) ஆகியோருக்கு இடையே நடக்கும் உரையாடலில் ஒரு வசனம்தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா கதாபாத்திரங்களான திரிஷா (ஜெசி), சிம்பு(கார்த்தி) இருவரும் தங்கள் வீட்டிலிருந்து செல்போனில் தொடர்புகொள்கின்றனர். அப்போது சிம்பு, உனக்கு டிவின்ஸ் பிறந்தார்களே எப்படி இருக்கிறார்கள். உன்னுடைய ஆள் எப்படி இருக்கிறார் என்று விசாரிக்கிறார். பிறகு, நீ எனக்கு வேணும் ஜெசி. ஐ லவ் யூ என்று கேட்கிறார். மேலும் கொரோனா தனிமைப்படுத்தல், தியேட்டர் திறப்பு, அடுத்த படத்துக்கான வசன தேடல் என்று இருவரின் உரையாடலும் தொடர்கிறது. கடைசியில்,ஐ லவ் யூ கார்த்திக் என்று திரிஷாவும் சொல்கிறார். இதன் கிளைமாக்ஸ் ஒரு கவித்துமான நிலையில் முடிகிறது.

சிம்புவும், திரிஷாவும் ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே நடித்திருந்தாலும் உணர்வு ரீதியாக இரண்டு கதாபாத்திரங்களும் என்ன மன நிலையில் இருப்பார்களோ அதே மனநிலைக்கு சென்றிருப்பதுதான் இந்த குறும்படத்தின் வெற்றிக்கும் வரவேற்புக்கும் காரணம். விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் எப்போது வரும் என்ற ஆவலை இது தூண்டிவிட்டிருக்கிறது.

கவுதம்மேனன் இயக்கி இருக்கும் இக்குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். யூ டியுபில் வெளியாகி வைரலாகி இருக்கும் இதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

You'r reading திரிஷாவுக்கு இரட்டை குழந்தை..! சிம்பு போனில் உரையாடியபோது அம்பலம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை