மாஜி முதல்வரை நினைத்து உருகிய நடிகர் -நடிகை தம்பதி..
Actor Pays Huge Respects To His CM Dad
'சந்தோஷ் சுப்பிரமணியம்' பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.
நேற்று அவரது 75வது பிறந்ததினம். தந்தையின் நினைவில் மூழ்கினார் ரிதேஷ் தனது தந்தையின் அறைக்குச் சென்றவர் அங்கிருந்த உருவப்படத்தைப் பார்த்து உருகினார். பிறகு ஹாங்கரில் தந்தையின் உடை மாட்டியிருப்பதைக் கண்டதும் அதைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினார். பிறகுத் தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில், 'ஹேப்பி பர்த்டே அப்பா ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் செய்கிறேன்' என்று பதிவிட்டார்.
அவரது உணர்வைக் கண்டு பலரும் பதில் அளித்திருந்தனர். நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு கைகளும் கட்டி அஞ்சலி செலுத்துவது போல் இமோஜி வெளியிட்டிருந்தார்.
ரிதேஷ் மனைவி ஜெனிலியா மாமனாரின் அன்பை நினைவுகூர்ந்து 'நீங்கள் எங்கிருந்தாலும் எங்களுடனே இருக்கிறீர்கள். உங்களை நினைக்காத நாட்களே இல்லை பிறந்தநாள் வாழ்த்துக்கள் ' எனக் குறிப்பிட்டிருந்தார்.
You'r reading மாஜி முதல்வரை நினைத்து உருகிய நடிகர் -நடிகை தம்பதி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News