இளையராஜா அர்ப்பணித்த கொரோனா பாடலுக்குத் துணை ஜனாதிபதி பாராட்டு.. பாரத பூமி புண்ணிய பூமி நாம் அதை மறந்திட வேண்டாம்..

Mastro Ilayaraja tribute to corona warriors

by Chandru, May 31, 2020, 11:10 AM IST

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த 60 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர்கள், நர்ஸ்கள், போலீஸார் தன்னார்வாலர்கள் போன்றோர் சிகிச்சை அளித்தும் பாதுகாப்பு, உணவு அளித்தும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இசைஞானி இளையராஜா பாரத பூமி என்ற பாடல் ஆல்பம் உருவாக்கி அதனை கொரோனா போர் வீரர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்.


பாரத பூமி புண்ணிய பூமி நாம் அதை மறந்திட வேண்டாம்.. என்று தொடங்கும் அந்த பாடல் நெட்டில் வைரலாகி இருக்கிறது. மேலும் இந்தியத் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

You'r reading இளையராஜா அர்ப்பணித்த கொரோனா பாடலுக்குத் துணை ஜனாதிபதி பாராட்டு.. பாரத பூமி புண்ணிய பூமி நாம் அதை மறந்திட வேண்டாம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை