தமிழ் பட இயக்குனர் திடீர் மரணம்.. நடிகை சஞ்சனா சிங் அஞ்சலி..

Debutant Tamil director Balamithran dies in Chennai

by Chandru, Jun 11, 2020, 10:11 AM IST

நடிகை சஞ்சனா சிங் நடிக்கும் படம் உடுக்கை. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலாமிர்தம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று பக்கவாத நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.


உடுக்கை படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் படப்பணிகள் முடங்கிருந்ததில் அவர் மன உளைச்சலிலிருந்ததாக கூறப்படுகிறது. இறந்த பாலாமிர்தமிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பாலமிர்தம் இறந்த தகவலைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சஞ்சனா சிங். அவர் கூறும்போது.பாலாமிர்தம் மரணச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். உடுக்கை படத்தின் படப்பிடிப்பின் போது மிகவும் கனிவாகவும். அன்போடும் பழகினார். இவ்வளவு சிறிய வயதில் அவர் இறந்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading தமிழ் பட இயக்குனர் திடீர் மரணம்.. நடிகை சஞ்சனா சிங் அஞ்சலி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை