கொரோனாவால் உயிரிழந்த தொண்டருக்கு கமல் தந்த பட்டம்.. நற்பணி நாயகா..

Corona Death: Kamal Haasan Condolences To his Party Member

by Chandru, Jun 11, 2020, 15:29 PM IST

கொரோனா தொற்றை ஒழிக்க அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தலும் ஒழிந்த பாடில்லை. கொரோனாவின் தீவிரத்தைத் தினமும் மக்கல் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கை மூலமாகவும் வீடியோ பேச்சு மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் மூலமாகவும் மேற்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் கொரோனா ஒழிப்பு சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூக நற்பணியில் ஈடுபட்டு வந்த கட்சியின் தொண்டர் திலக் என்பவர் கொரோனா பாதிப்பில் இறந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் , எந்த பதவியும் நாடாமல், நற்பணிக் காக நம்முடன் இணைந்த தோழர் திரு. திலக் அவர்கள் நம் அடையாளம். நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும். திலக், தொண்டனாகவே வாழ்ந்தார், தொண்டனாகவே மறைந்தார். நற்சேவை நாயகா...நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

You'r reading கொரோனாவால் உயிரிழந்த தொண்டருக்கு கமல் தந்த பட்டம்.. நற்பணி நாயகா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை