5 வருடமாக மன அழுத்ததில் இருக்கும் நடிகை..
Actress Payal Ghosh Suffering From Depression
திரையுலகில் பளபளப்பு அதிகம் இருந்தாலும் அதில் சில நட்சத்திரங்கள் பட வாய்ப்பில்லாமல் மனதுக்குள் புழுங்கி வருவது அம்பலமாகி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு இதுபோன்ற நிலைதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கு இந்தியிலும் நடித்து வருகிறார்.
அவர் கூறியிருப்பதாவது:கடந்த 5 வருடமாக நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். அதற்காக அவ்வப்போது சிகிச்சை, மருந்து எடுத்து வருகிறேன். எனது நண்பர்கள், என் குடும்பத்தினரிடம் பேசி மன அழுத்தத்தை போக்கிக்கொள்கிறேன். நான் இறந்துவிடப் போகிறேன் என்று அவ்வப்போது எண்ணம் வரும் அந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை பெற்று மீள்வேன்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தில் இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறார். பல வருடங்களாக இருவரும் பக்கத்து வீட்டுக்கார்களாகவே இருந்தோம். ஒரே ஜிம்மிற்கு செல்வோம். பல நினைவுகள். இருவரும் நன்றாகப் பேசி கலந்துரையாடுவோம். சிரித்து மகிழ்வோம். இன்றைக்கு எல்லாமே வெறுமையாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்
You'r reading 5 வருடமாக மன அழுத்ததில் இருக்கும் நடிகை.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News