கங்கையில் கரைத்த நடிகரின் அஸ்தி..

Actor Sushaanth sing Rajput Asthi dissolved in Ganga

by Chandru, Jun 19, 2020, 10:23 AM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சின் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி சொந்த ஊரான பாட்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. கங்கையாற்றில் அவரது குடும்பத்தினர் அஸ்தியைக் கரைத்தனர்.அஸ்தி கரைக்கும் நிகழ்வு மிகவும் உருக்கமாக இருந்தது. ஊர் மக்கள் திரண்டு சுஷாந்த் அஸ்திக்குப் பாரம்பரிய முறைப்படி அஞ்சலி செலுத்தினார்கள்.


இதுபற்றி சுஷாந்த் சகோதரி சுவேதா சிங் கூறும்போது,சுஷாந்த்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. அவர் பல போராட்டங்களை எதிர்கொண்டிருந்தார். ஒரு போராளியாக அதை அவர் எதிர்கொண்டார். ஆனால் அவருக்குள் இவ்வளவு வலி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது அஸ்தி முறைப்படி கரைக்கப்பட்டது. ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading கங்கையில் கரைத்த நடிகரின் அஸ்தி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை