சுஷாந்த் சிங் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலி மீது வழக்கு...

A petition filed against Rhea Chakraborty

by Chandru, Jun 22, 2020, 15:30 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது காதலி ரெயிஹா சக்ரபோர்த்தியிடம் ஏற்கனவே போலீஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். சுஷாந்த்துடன் ரெயிஹா டேட்டிங் செய்து வந்தார். அவர் திடீரென்று சுஷாந்தைவிட்டு பிரிந்ததால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.


பீகாரில் வசிக்கும் குண்ட்குமார் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். சுஷாந்தின் தற்கொலைக்கு நடிகை உதவியதாகக் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்.அதில். கிட்டத்தட்ட ஒரு வருடம் சுஷாந்த்துடன் வாழ்ந்த சக்ரபோர்த்தி கருத்து வேறுபாடுகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். ரெயிஹாவின் அனைத்து படங்களையும் தனது இன்ஸ்டாகிராமலிருந்து நீக்கியதாக சுஷாந்த் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சுஷாந்த் தனது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வழக்கில் குறிப்பிட்டுள்ளார். மாடல் அழகியான ரெயிஹா சக்ரபோர்த்தி நடிகையாகத் தெலுங்கில் எம்.எஸ்.ராஜுவின் மகன் சுமந்த் அஸ்வின் நடித்த துனீகா துனேகா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சுஷாந்த் சிங் தற்கொலையில் திடீர் திருப்பம்.. காதலி மீது வழக்கு... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை