சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொன்ற கொடூரம்.. நீதி கேட்டு பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ வைரல்..

Singer Suchitra about Jayaraj and Fenix Incident

by Chandru, Jun 28, 2020, 10:56 AM IST

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா. தனியார் வானொலியில் ஆர் ஜே வாக பணியாற்றிப் புகழ் பெற்றார். சமீபத்தில் சாத்தன் குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்து வைத்திருந்தாக கூறி தந்தை ஜெயராஜ், மகன் ஃபீனிக்ஸ் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரண்டு போலீஸார் இட மாற்றம் செய்யப்பட்டனர் .

பாடகி சுசித்ரா இந்த கொடூர சம்பவத் தை அமெரிக்காவில் ஒரு போலீஸ் அதிகாரி இன வெறியால் கருப்பினத்தவர் ஒருவரைக் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவத்துடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார். எல்லா நாட்டினருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் இதுபற்றி பேசியிருக்கிறார். அது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போலீசாரை சஸ்பெண்டு செய்திருப்பது மட்டும் தீர்வாகாது. நீதி வேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார்.

You'r reading சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொன்ற கொடூரம்.. நீதி கேட்டு பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ வைரல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை