பாடகி எஸ்.ஜானகி ஆடியோவில் பேசினார்.. எத்தனை முறை சாகடிப்பார்கள்..

They have killed me six times - S Janakis audio message

by Chandru, Jun 30, 2020, 14:05 PM IST

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிந்தது. ஜானகியின் மகன் தனது தாயார் எஸ்.ஜானகி நலமாக இருப்பதாகக் கூறினார்.நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ வெளியிட்டு எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்களைக் கண்டித்தார்.

இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி ஆடியோவில் தன்னை பற்றிய வதந்திக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். தெலுங்கில் அவர் பேசியிருக்கிறார். அவர் கூறும்போது,நான் நலமாகப் பெங்களூரில் இருக்கிறேன். ஆனால் இறந்துவிட்டதாகக் கிளப்பிவிடுகிறார்கள். இதுபோல் 6 முறை செய்துவிட்டார்கள். எத்தனை முறை என்னைச் சாகடிப்பார்கள். எனக்குப் பலர் போன் செய்து பேசி அழுகிறார்கள். ஒருவரைப்பற்றி இறந்துவிட்டதாகத் தகவல் சொல்லும் போது அதை ஏன் விசாரித்து உறுதி செய்வதில்லை. நான் நலமாக ஆரோக்கியமாக இருக்கிறேன் யாரும் வருத்தப்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading பாடகி எஸ்.ஜானகி ஆடியோவில் பேசினார்.. எத்தனை முறை சாகடிப்பார்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை