சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கடைசி பட ஹீரோயின் வாக்குமூலம்..
Mumbai Police Record Statement Of Sushants Last Heroine
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம்14ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் சோதனையிட்ட போது மன அழுத்தத்துக்காக டாக்டரிடம் ஆலோசித்து மருந்து வாங்கிய சீட்டு இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுஷாந்த் தந்தை, சகோதரிகள், காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் கடைசியாக நடித்த தில் பேச்சாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா சங்கியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வாக்குமூலங்களின் அடிப்படையில் சுஷாந்த்தின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You'r reading சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கடைசி பட ஹீரோயின் வாக்குமூலம்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News