போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குறோம்.. பாடகி சின்மயி வேதனை..

Singer Sinmai worry about ladies abused

by Chandru, Jul 5, 2020, 10:00 AM IST

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார் திரைப்பட பின்னணி பாடகி.
சமீபத்தில் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு எதிராக திரையுலகினர் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் சசிகலா என்ற பெண்ணை சகோதரர்கள் இருவர் ஆபாசப்படம் எடுத்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்தடுத்த பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த கொடுமைக்குப் பலரும் நீதி கேட்டு வருகின்றனர். இது குறித்து வேதனை வெளிப்படுத்தி உள்ள பாடகி சின்மயி, போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குறோம்ன்னு தோணுது என டிவிட்டரில் தெரிவித்திருப்பதுடன் தற்கொலை செய்து கொண்ட சசிகலாவுக்கு நீதி கேட்டிருக்கிறார்

You'r reading போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குறோம்.. பாடகி சின்மயி வேதனை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை