அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் பற்றி அதிர்ச்சி தகவல்..
Bomb Threat To Ajith House: Police arrested a person
நடிகர் அஜீத்குமார் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது, முன்னதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய மர்ம நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.இதையடுத்து ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் சென்றனர். வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த அஜீத்தை போலீசார் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவலை கூறினார்.
அவர்களுக்கு அஜீத் ஒத்துழைப்பு கொடுத்தார், சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு இருக்கிறதா என்று மூலை முடுகெல்லாம் தேடினர். வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அதேபோல் திருவான்மியூரில் உள்ள வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தினர் அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விட்டது யார் என்று செல்போன் நம்பரை வைத்துக் கண்டுபிடித்தனர். புதுச்சேரிப் பகுதியில் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதே நபர் தான் கடந்த வாரம் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர் என்பது தெரியவந்திருக்கிறது.
You'r reading அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் பற்றி அதிர்ச்சி தகவல்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News