கொலை, பாலியல் பலாத்காரம் பற்றி நடிகரின் காதலி போலீசில் புகார்..
Murder, Rape Threat: Rhea Chakraborty Complaints Against Two Netizens
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதற்கு வாரிசுகள் அவமரியாதை, ஒப்பந்தம் என்ற பெயரில் பிற படங்களில் நடிக்கவிடாமல் தடுத்தது, மன அழுத்தம் ஆகியவற்றுடன் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியை பற்றியும் நெட்டிஸன்கள் அவதூறாகத் தகவல் வெளியிட்டனர்.ரியாவோ அதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்ததுடன் சுஷாந்த்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அவர் மறைந்து 1 மாதம் ஆன நிலையில் உருக்கமான கடிதம் வெளியிட்டதுடன், என் வாழ்நாள் முழுவதும் உன்னைக் காதலிப்பேன். நீ எங்கிருந்தாலும் சந்தோஷமுடன் இருக்க வேண்டும் சுஷாந்த் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ரியாவுக்கு அடையாளம் தெரியாத நெட்டிஸன், சுஷாந்த் தற்கொலைக்குப் பதிலாக உன்னைக் கொலை செய்வேன், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுவாய், இல்லாவிட்டால் நீயே தற்கொலை செய்து கொள் என மிரட்டல் விட்டிருந்தார். அந்த மெசேஜை டிவிட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட ரியா நேற்று மும்பை போலீஸ் துணை கமிஷனரை நேரில் சந்தித்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்தார். இதுபற்றி துணை கமிஷனர் கூறும் போது ரியா அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
You'r reading கொலை, பாலியல் பலாத்காரம் பற்றி நடிகரின் காதலி போலீசில் புகார்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News