இணைய தளத்தில் வனிதா, கஸ்தூரி கடும் மோதல்.. காமெடி பீஸ் கஸ்தூரி, குழாயடி சண்டைக்காரி வனிதா..

Vanitha, Kasthuri Clash Conitnous As TV Mega Serial

by Chandru, Jul 20, 2020, 12:42 PM IST

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் வனிதா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி இருவரும் வனிதா திருமணம் பற்றி விமர்சித்தனர். அவர்களுக்கு வனிதா பதில் அளித்தார். தனிப்பட்ட என் வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள். என் வாழ்கையை எனக்குப் பார்த்துக் கொள்ளத் தெரியும். இல்லாவிட்டால் உங்களைப் பற்றி நான் அம்பலப்படுத்துவேன் என்றார். அதன்பிறகு சில நாட்கள் இந்த சண்டை ஓய்ந்த நிலையில் மீண்டும் கஸ்தூரி வனிதாவுக்கு இடையேயான இணைய தள மோதல் குழாயடி சண்டையாக மாறி இருக்கிறது.

லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி வனிதா அவதூறாகப் பேசியது பொறுக்க முடியாமல் வனிதாவை கஸ்தூரி குழாயடி சண்டைக்காரர் எனவும், காமெடி பீஸ் கஸ்தூரி என்று வனிதாவும் கலாய்த்தனர். கஸ்தூரி - வனிதா மோதல் இதுதான்:

கஸ்தூரி: திருமதி லட்சுமி ராம கிருஷ்ணனை எண்ணி என் இதயத்தில் இரத்தம் கசிகிறது. தயவு செய்து நீங்கள் மலிவான குழாயடி சண்டைக் காரிகளுடன் (வனிதா) பேச வேண்டாம். வனிதாவை எச்சரிக்கிறேன். உங்களது செயல்பாடுகள் மிகவும் மோசமாக உங்களது . ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நயவஞ்சக வனிதா இணைய தள துஷ்பிரயோகம் செய்கிறார். இப்படித் தான் ஒரு பெண் தன்னைப்பற்றி அவதூறாக பேசியதாக அவர் (சூர்யா தேவி) மீது போலீஸில் வழக்கு பதிவு செய்தார். அதே குற்றத்தைத்தான் மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதா செய்துள்ளார். இதற்காக வனிதாவை கைது கூட செய்யலாம்.

(கஸ்தூரியின் இந்த பதிலுக்கு வனிதா சூடாக பதில் அளித்தார்)
வனிதா: கடைசி எச்சரிக்கை நீங்கள் (கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன்) எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னமும் தலையிட முயற்சித்தால், உங்கள் பரிசுத்தமான வாழ்க்கையை சமூகத்திற்கு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன். உங்கள் செயல்பாடுகள் நடிகை போல் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

கஸ்தூரி: வனிதா ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டுமே இருப்பதால் எனது தனிப் பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இது உங்களுக்கு எந்த நன்மையையும் தராது .. ஆனால் உங்களுடையது சீசன் 1,2, 3போன்றது. (வனிதா 3 முறை திருமணம் செய்தார்) அதுபோன்ற மெகா சீரியல் வாழ்க்கை எனக்கில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப்பில் இருந்து எடுத்துப் பார்த்து விட்டு பின்னர் பேசுங்கள். நயவஞ்சக. உங்கள் இணையத் துஷ்பிரயோகத்தை நிறுத்துங்கள், மேடம் லட்சுமிக்கு எதிராக உங்கள் சாதாரணமான வாயை உலகம் முழுவதும் பார்த்தது. நீங்கள் பேசுவதையெல்லாம் திருத்துவதற்கு வசதியாக இங்கு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நண்பர்களும் இல்லை. நீங்களே உங்களை அம்பலப்படுத்துகிறீர்கள், வேறு யாரும் குறை சொல்ல வேண்டியதில்லை.

வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு (வனிதா) எதுவும் தெரியாது. ஒரு பெண்ணுக்கு ஒரு வழக்கறிஞராகத் தோன்றுவதற்கான உரிமை உள்ளது. உங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நீங்கள் யூடியூபில் ஒரு போலி நாடகத்தை உருவாக்குகிறீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளைப் பயன்படுத்தி விளம்பரம் பெறுவதற்காக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். ஊடகங்கள் நான் சொல்லும் செய்திகளைக் வெளியிடுவதால் என்னைச் சீண்டுகிறீர்கள்.நீங்கள் வாழ்க்கையில் தோல்வியுற்றவர். வாழ்க்கையில் ஏதாவது செய்ய முயற்சிக்கிறீர்கள். இந்த கட்டத்தில் உங்கள் பெயரைப் பிரபலப்படுத்துவதற்கு என் நிழலைப் பயன்படுத்த வேண்டாம். தீவிரமாக ஒரு வாழ்க்கையை வாழப் பாருங்கள்.

வனிதா: எனது டிவிட்டர் பக்கத்திலிருந்து கஸ்தூரி என்ற கோமாளியை பிளாக் செய்கிறேன். அவர் எதையாவது உளறிக்கொண்டிருக்கட்டும். அவரால் அதுதான் முடியும். காமெடி பீஸ்...இவ்வாறு கஸ்தூரி, வனிதா இருவரின் சண்டையும் டிவி மெகா சீரியல் போல் தொடர்கிறது.

You'r reading இணைய தளத்தில் வனிதா, கஸ்தூரி கடும் மோதல்.. காமெடி பீஸ் கஸ்தூரி, குழாயடி சண்டைக்காரி வனிதா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை