தற்கொலை செய்த நடிகரின் கடைசி படம் இன்று ரிலீஸ்.. எங்கே, எப்போது தெரியுமா?
Sushanth Last Film Dil Bechara release today
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் காதலி ரியா, படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.சுஷாந்த் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா. இப்படம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று (ஜூலை 24) டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியிடப்படுகிறது.
சுஷாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். இப்படத்தை முகேஷ் சாப்ரா இயக்குகிறார். மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் இன்று இரவு 7:30 மணி முதல் 'தில் பெச்சாரா ' அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும். இது பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் ஒரு அழகான பையன். நாளை (இரவு 7:30 மணி முதல்) #DilBechara ஸ்ட்ரீமிங்கில் அவர்களின் அழகை பாருங்கள்.தில்பெச்சாரா படம் காதல் கதையாக உருவாகி இருக்கிறது. கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் , வாழ்கையை வெறுத்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு காதலையும் ஏற்படுத்தும் சுஷாந்த்தின் வித்தியாசமான நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. 9 பாடல்கள் இடம் பெறும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
You'r reading தற்கொலை செய்த நடிகரின் கடைசி படம் இன்று ரிலீஸ்.. எங்கே, எப்போது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil
More Cinema News