மோதலின் உச்சக்கட்டத்தில் திடீர் மன்னிப்பு கோரிய நடிகை வனிதா.. தம்பி, தங்கச்சி மன்னிச்சிடுங்க..

Actress Vanitha rendered an apology from Thanjavur people.

by Chandru, Jul 25, 2020, 10:47 AM IST

நடிகர் வனிதா டிவி டெக்னீஷியன் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்ததால் அதுபற்றி சர்ச்சை எழுந்தது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் சூரியா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் , டைரக்டர் நாஞ்சில் விஜயன் போன்றவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். இதையடுத்து டிவிட்டரிலும், யூடியூபிலும் அவர்கள் மோதிக் கொண்டனர். லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா ஒருமையில் பேசி தாக்கினார், இது பரபரப்பானது. பின்னர் 4 பேர்கள் மீதும் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரியா தேவியைக் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தனர். மற்றவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று வனிதா கேட்டு வருகிறார்.

இதற்கிடையில் ஒருமையில் பேசி அவமானப்படுத்திய வனிதா இணைய தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டால் இப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நடிகைகள் தரப்பில் கூறினர், இந்நிலையில் வனிதா மன்னிப்பு கோரி மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அது லட்சுமி, கஸ்தூரியைப் பேசியதற்காக அல்ல. தஞ்சாவூர்க்காரர்கள் இரண்டு பெண்டாட்டிக்கார்கள் என்று வனிதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் தஞ்சாவூர்காரர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் வனிதாவைத் திட்டியதுடன் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து வனிதா மன்னிப்பு கோரியிருக்கிறார்.வனிதா டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, தஞ்சையில் இருக்கும் எனது சக சகோதர சகோதரிகளே ... தயவுசெய்து என் கோபத்தையும் நான் பேசிய தொணியை யும் தவறாக எண்ண வேண்டாம். மற்றொரு பிரச்சனை பற்றிப் பேசியதை உங்களை அவமரியாதை செய்ததாகத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய எதையும் நான் தற்செயலாகச் சொல்லியிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன் . தஞ்சை மண்ணுக்கு என்றும் நான் தலைவணங்குகிறேன். என குறிப்பிட்டிருக்கும் வனிதா மற்றொரு டிவிட்டில்
தவறாகப் பேசி இருந்தால் தம்பி, தங்கச்சிகள் மன்னிக்கவும் எனத் தெரிவித்து தஞ்சை பெரிய கோயில் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

நடிகை வனிதா இணைய தளத்தில் கடும் சர்ச்சையில் ஈடுபட்ட நிலையில் நடிகை நயன்தாரா பிரபுதேவா பற்றி விமர்சித்திருந்தார். அதைக்கண்டு நயன்தாரா ரசிகர்கள் கோபம் அடைந்து, நயன்தாராவிடம் வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஹேஷ் டேக் உருவாக்கினர், அது டிரெண்டிங் ஆனது. இதையடுத்து வனிதா டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த வனிதா. நயன்தாரா பற்றி நான் தவறாகக் கூறவில்லை. அவர் எதிர்ப்புகளை ஏறி மிதித்துவிட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவர். அதுபோல் நானும் வருவேன் என்று தான் கூறினேன் என நயன் ரசிகர்களைச் சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து வனிதா தற்போது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

You'r reading மோதலின் உச்சக்கட்டத்தில் திடீர் மன்னிப்பு கோரிய நடிகை வனிதா.. தம்பி, தங்கச்சி மன்னிச்சிடுங்க.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை