சூர்யா தேவிக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வனிதா முடிவு.. திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்..

Actress Vanitha Decide to drop Action against suriya devi

by Chandru, Aug 4, 2020, 14:25 PM IST

நடிகர் வனிதா, பீட்டர்பால் திருமணம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு நடந்தது. வனிதா 3வது திருமணமாக இருந்தாலும் முறைப்படி தனது முன்னாள் கணவர்களிடம் விவாகரத்து பெற்றிருந்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் தனது முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார். இதுபற்றி போலீசில் முதல் மனைவி ஹெலன் புகார் அளித்தார்.வனிதா, பீட்டர்பால் திருமணத்தை நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் கடுமையாக விமர்சித்தனர். அவர்களுக்குப் பதிலடி கொடுத்த வனிதா பிறகு போலீசில் புகார் அளித்தார். இதில் சூரியா தேவி கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமினில் வெளியில் வந்து தலைமறைவாகிவிட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் வனிதாவிடம் நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பை வனிதா ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் ஒரு நபர் சூரியா தேவிக்கு ஆதரவாக வனிதாவுக்கு மெசேஜ் பகிர்ந்து,சூரியா தேவியால் நீங்கள் மனக்கஷ்டம் அனுபவித்தீர்கள் என்பது தெரியும் இப்போது அவரது நிலைமை சரியில்லை. அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். அவர் மீது நீங்கள் கொடுத்த புகாரால் அவரது நிலைமை மோசமாகி இருக்கிறது. அவருக்கு உதவ வேண்டும் என்றார். இதற்கு வனிதா பதில் அளித்திருக்கிறார். அதில். இது குறித்து நான் அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன். முதலில் அவர் எங்கிருக்கிறார் என்பது கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய குழந்தைகள் காக்கப்பட வேண்டும். கொரோனா வழக்கமான ஒரு வைரஸ் கிடையாது. அதை வைத்துக் கொண்டு இங்கும் அங்கும் சுற்றுவதற்கு... நான் கண்டிப்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டேன். நானும் ஒரு மனுஷிதான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading சூர்யா தேவிக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வனிதா முடிவு.. திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை