கமலிடமும், ரஜினியிடமும் கேட்க வேண்டியதுதானே - கடுப்பான அதிமுக அமைச்சர்

தயாரிப்பாளர் சங்கத்தினர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு, அமைச்சர் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக பதிலளித்துள்ளார்.

Mar 14, 2018, 13:47 PM IST

தயாரிப்பாளர் சங்கத்தினர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு, அமைச்சர் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக பதிலளித்துள்ளார்.

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், புதுப்படங்கள் ஏதும் ரிலீஸ் செய்யப்படவில்லை.

தொடர்ந்து, வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடைப்பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்திக்கச் சென்றனர். அப்போது, “என்னை எதற்கு பார்க்க வருகிறீர்கள். அதுதான் உங்களது பிரச்சனை மட்டுமில்லாமல், எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு சொல்வதற்கு கமலும் ரஜினியும் இருக்கிறார்களே. அவர்களிடம் போய் சொல்ல வேண்டியதுதானே” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கமலிடமும், ரஜினியிடமும் கேட்க வேண்டியதுதானே - கடுப்பான அதிமுக அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை