குஷ்பு பட தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகை தாயார் காலமானார்..

Tamil Producer KRKannan Passed away Today

by Chandru, Sep 2, 2020, 10:51 AM IST

தமிழில் குஷ்பு. கரண் நடித்த கலர் கனவுகள் படத்தைத் தயாரித்தவர் கே.ஆர்.கண்ணன். இப்படத்தை விஷ்வா இயக்கி இருந்தார். தவிர மௌன யுத்தம், கல்யாண காலம், அவன், நாணயம் இல்லாத நாணயம், போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களையும் கே.ஆர். கண்ணன் தயாரித்தார். கே.ஆர்.கே.மூவீஸ் நிறுவனத தின் உரிமையாளர் இவருக்கு வயது 73 ஆகிறது. கேஆர்.கண்ணன் நேற்று மாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (02.09. 2020 ) புதனன்று மாலை 4.00 மணியளவில் முகலிவாக்கம் அருகே உள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

கேஆர் கண்ணன் தமிழ்த் திரைப்பட சங்கத்தில் தந்து பங்களிப்பை நிறைய அளித்திருக்கிறார். இவரது மகன் கே.ஆர்,விஷ்வா பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.
டார்லிங் டார்லிங் டார்லிங், தங்கமகன், விதி உள்ளிட்ட பல படங்களில் 80 களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் பூர்ணிமா. இயக்குனர் கே, பாக்யராஜை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகன் நடிகர் சாந்தனு.

நடிகை பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி. 85 வயதாகும் இவர் சென்னை லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவர் மரணம் அடைந்தார். சுப்புலட்சுமியின் மகள் பூர்ணிமா மற்றும் ஸ்ரீராம் என்ற ஒரு மகன் இருக்கிறார். காலமான சுப்புலட்சுமி இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

You'r reading குஷ்பு பட தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகை தாயார் காலமானார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை