பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் பிரபாஸ் ஜோடி நடிகை சிக்குகிறார்? திரையுலகை அதிரவைக்கும் பட்டியல் தொடர்கிறது..
Actress Shradha Kapoor name in Drug dealing case
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பிண்ணப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. நடிகரின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த்துக்கு போதை மருந்து அதிக அளவில் கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரியா மீது போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரது சகோதரர் மற்றும் மேனேஜர், வேலையாள் ஆகியோரும் இதில் கைது செய்யப்பட்டனர். ரியாவுடன் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் போதை மருந்து தொடர்பில் இருக்கும் பிற நடிகர், நடிகை தயாரிப்பாளர் என 15க்கும் மேற்பட்டவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் ஆகியோர் பெயர்களை அளித்திருக்கிறார். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தன்னைப்பற்றி மீடியாக்களில் ஆதாரம் எதுவும் இல்லாமல் தவறான தகவல்கள் வெளியிடப்படுகிறது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ரகுல்.தற்போது மேலும் ஒரு நடிகை பெயர் இந்த விவகாரத்தில் ரியா தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. இது பாலிவுட்டை மட்டுமல்லாமல் கோலிவுட், டோலிவுட்டையும் அதிர வைத்திருக்கிறது.
பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடித்த படம் சாஹோ. இதில் இவருக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். அவரை சுஷாந்தின் போதை மருந்து விவகாரத்தில் கோர்த்து விட்டிருக்கிறார் ரியா , ஷ்ரத்தா கபூரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அடுத்து யாரெல்லாம் விசாரணை வலையத்தில் சிக்கப் போகிறார்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
You'r reading பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் பிரபாஸ் ஜோடி நடிகை சிக்குகிறார்? திரையுலகை அதிரவைக்கும் பட்டியல் தொடர்கிறது.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News