பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்.. வெளிநாடு தப்பாமலிருக்க பாஸ்போர்ட் முடக்கம்...!

Actress Rhea Chakraborthi Gor Bail in drug case

by Chandru, Oct 7, 2020, 14:26 PM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு ஒரு முடிவுக்கு வராமல் நீண்டுக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சுஷாந்த்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்த் காதலி, நடிகை ரியா மீது புகார் கூறப்பட்டது. போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரியாவை விசாரித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரியா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போதை மருந்து விவகாரத்தில் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ரியா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செசன்சு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. பிறகு ஒரு மாதமாக அவரது வழக்கைச் சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்து வருகிறது. மீண்டும் ரியா ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

போதை மருந்து விவகாரத்தில் கைதான ஒரு மாதத்துக்குப் பிறகு ரியா சக்ரவர்த்தி ஜாமீனில் வெளிவருகிறார்.ரியாவுக்கு நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் ரொக்க கட்ட வேண்டும், சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்குச் சென்று 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

You'r reading பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்.. வெளிநாடு தப்பாமலிருக்க பாஸ்போர்ட் முடக்கம்...! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை