விஜய் சேதுபதி மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கண்டுபிடிப்பு!

police ask interpol help to find srilankan youth who threaten vijay sethupathi daughter

by Sasitharan, Oct 21, 2020, 20:30 PM IST

பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தனர். ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவாக இருந்தார். அவர் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் எனவே அந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.

இந்த நிலையில் யாரோ ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து டிவிட்டர் மெசேஜ் பகிர்ந்துள்ளார். அதைக் கண்டு விஜய் சேதுபதி ரசிகர்கள் கோபம் அடைந்தனர். அந்த நபர் மீது வழக்கு பதிந்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் அந்த நபரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது. இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You'r reading விஜய் சேதுபதி மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கண்டுபிடிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை