தியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன?

by Chandru, Oct 28, 2020, 14:57 PM IST

2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 5 மாதம் கடந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து முடிவடைந்திருக்கும் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி இருக்கிறது. தியேட்டர்களை திறக்க கேட்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்க ளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார்.

அவர் கூறியதாவது:சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்க வேண்டும். இரு இருக்கைக்கு இடைவெளி விட்டு அடுத்தவர் அமர வேண்டும். உட்காரக்கூடாத இருக்கைக்கு அடையாளம் குறி இட வேண்டும். ரசிகர்களுக்கு காய்ச்சல் டெஸ்ட் எடுத்த பிறகு காய்ச்சல் இல்லா விட்டால் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும் எப்போதும் டிக்கெட் கவுண்டர்கள் திறந்து வைக்க வேண்டும். இடைவெளி விட்டு நிற்க அடையாளக் குறி இட வேண்டும். டிஜிட்டல் முறையில் டிக்கெட் விற்பனை ஊக்குவிக்க வேண்டும். தியேட்டர் முழுவதும் படம் தொடங்குவதற்கு முன்பும் படம் முடிந்த பின்னும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். நொறுக்குத் தீனி அனுமதி கிடையாது . பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம் மட்டுமே விற்க வேண்டும். படம் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் கொரோனா விழிப்புணர்வு பற்றிய படங்களை திரையிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட அதிக தியேட்டர்கள் இருந்தால் கூட்டம் சேராதபடி நேர அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் மத்திய அமைச்சர் அறிவித்தார்.

மத்திய அரசின் வழிகாட்டு தலை பின்பற்றி தமிழக அரசும் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். ஆனால் தமிழகத்தில் தியேட்டர்கள் திறந்த பாடில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக சினிமா தியேட்டர் அதிபர்கள், மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவரும் இதுபற்றி மருத்துவர்கள், அதிகாரிகளுடன் பேசிவிட்டு 28ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று கோட்டையில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சினிமா தியேட்டர்கள் திறப்பு குறித்துக் கூறும்போது,கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.திரையரங்குகளைத் திறப்பது குறித்து கலெக்டர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து விரைவில் தியேட்டர்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை