எச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்..

by Chandru, Oct 30, 2020, 14:42 PM IST

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப்போது இடை வெளிவிட்டு படப்பிடிப்பு நடந்தது. திடீரென்று சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு செய்வதாக இயக்குனர் மீது புகார் சொன்ன பட நிறுவனம் படப்பிடிப்பை நிறுத்தியது. பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு ஷூட்டிங் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாக அனைத்து படப்பிடிப்புகளும் அடுத்த 5 மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது அரசு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கிய நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவது குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கான பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்று தெரிகிறது.

படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் காத்திருக்கிறார். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் ஷங்கர் அப்செட்டில் இருக்கிறார். தயாரிப்பு நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடும்படியான ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார் ஷங்கர். இதுபற்றி கூறப்படுவதாவது:
திரைப்பட படப்பிடிப்புகளை அரசாங்கம் அனுமதித்தவுடன் ஷங்கரும் அவரது குழுவினரும் இந்தியன் 2 படப்பிடிப்பை பட நிறுவனம் மீண்டும் தொடங்குவார்கள் என்று நம்பினர். ஆனால் இப்போது, ​​ஊரடங்கின் விளைவாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய தயாரிப்பு செலவை மேலும் குறைக்க தயாரிப்பு நிறுவனம் எண்ணுகிறது. ஆனால், ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்ட முதல் கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு பட்ஜெட்டை 400 கோடியிலிருந்து 220 கோடியாக குறைத்துள்ள ஷங்கர், மேலும் பட்ஜெட்டை குறைக்க முடியாது என தெரிவித்திருக்கிறார். இதனால் பட நிறுவனம் மவுனம் சாதித்து வருகிறது.

ஷங்கரும் இது குறித்து லைகா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்காவிட்டால் வேறு படத்தை இயக்கவிருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து மீண்டும் பட நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது அதை தீர்த்து வைப்பதற்கான முயற்சியும் நடக்கிறது. ஆனால் இந்தியன்2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையில் ஷங்கர் அடுத்த படத்துக்கு போவேன் என்று எச்சரித்து வரும் நிலையில் உலக நாயகன் தனது அடுத்தடுத்த பணிகளை நடத்தி பறந்துக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் அரசியல் நடத்திக் கொண்டிருந்தார் இன்னொரு பக்கம் பிக்பாஸ்4 நடத்துகிறார். அதைத் தொடர்ந்து தனது கமல்ஹாசன் 232 படத்துக்கான பணியையும் கவனித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். இந்தியன் 2 வில் தனது அதிரடி அரசியலை வசனங்களாக அரங்கேற்றவிருந்த கமல்ஹாசன் அதனை லோகேஷ் இயக்கும் படத்தில் அரங்கேற்ற உள்ளார். இதற்காக பிரதேக தோற்றமாக தற்போது பிக்பாஸ் 4ல் வருவது போன்ற தோற்றத்திலேயே நடிக்க உள்ளார். இதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அதில் ஒரு படத்தை லீக் செய்திருக்கிறார். சும்மா கெத்தாக இருப்பதாக ரசிகர்கள் மெசேஜ் பகிர்கின்றனர். நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாள் அன்றைய தினம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தனது புதிய தோற்ற படங்களை வெளியிட உள்ளார். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்குகிறார்.

You'r reading எச்சரிக்கை விடுத்த இயக்குனர் நடிக்க தயாரான உலக நாயகன்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை