திடீர் மாரடைப்பில் பிரபல இசை அமைப்பாளர் மரணம்.. திரையுலகில் அதிர்ச்சி..

by Chandru, Dec 11, 2020, 14:11 PM IST

கொரோனா காலகட்டம் மக்களுக்கும் திரையுலகினருக்கும் சோகமான அனுபவங்ளை தந்திருக்கிறது. சில சமயம் அதிர்ச்சியான தகவல்ளை தந்து துக்கத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகர், இசை அமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து மருத்துமனையில் அனுமதி ஆவதாக அவரே வீடியோவில் தகவல் வெளியிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். சில தினங்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. தீவிர சிகிச்சையில் அவருக்கு கொரோனா தொற்று குணம் ஆனாலும் நுரையீரல் பாதிப்பு அவரது உயிரை பறித்துக் கொண்டது. இது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் கன்னட திரையுலகில் தனது அண்ணன் நாகேந்திராவுடன் இணைந்து 375 படங்களுக்கு மேல் இசை அமைத்த ராஜன் தனது 85 வயதில் உடல் நலமில்லாமல் இருந்து இறந்தார்.

இந்த சோகங்கள் நடந்த சில மாதங்களியே மற்றொரு சோக நிகழ்வாக பிரபல இசை அமைப்பாளர் மாரடைப்பில் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராத்தி படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியவர் நரேந்திர பிடே. மராத்தி படங்களில் உள்ள பாப்புளர் இசை அமைப்பாளர்களில் நரேந்திரே படே ஒருவர். கோஸ்ட், பயாஸ்கோப், சேனா குருஜி, சரிவார் சரி போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியான பல பாடல்கள் ஹிட்டாக அமைந்துள்ளன. இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனில்லாமல் நேற்று இறந்தார். அவருக்கு வயது 45. இறந்த நரேந்திர பிடேவுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் குடும்பத்துடன் புனேவில் வசித்து வந்தார். நரேந்திர பிடேவின் மரண செய்தி மராத்திய திரையுலகினரை அதிர்ச்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது. அவரது புகைப்படங்களை ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களில், பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் சர்னாபதி ஹம்பிராவ் என்ற படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது அவரது கடைசி படமாக அமையும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. நடிகர் மகேஷ் மஞ்சுரேக்கர், நடிகை சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இசை துறையில் சிறந்த ஞானம் கொண்டவர். மராத்தியின் கலாச்சாரத்துக்கு ஏற்ப தகுந்த இசை அமைத்து அதனை மக்கள் மனதில் பதிய விட்டவர். அவரது இழப்பு இசை துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகர் ஓம்கர் தட்டே தெரிவித்திருக்கிறார். செய்தியாக நரேந்திர பிடே காலமான செய்தி அமைந்திருக்கிறது.

You'r reading திடீர் மாரடைப்பில் பிரபல இசை அமைப்பாளர் மரணம்.. திரையுலகில் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை