காஜல் பாணியில் தேனிலவு திட்டமிட்ட நடிகை..

by Chandru, Dec 25, 2020, 16:53 PM IST

நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபரும் பாய்ஃ பிரண்டுமான கவுதம் கிட்ச்லுவை மணந்தார். பின்னர் அவருடன் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு ஒரு மாதம் தேனிலவு கொண்டாடியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இதற்கிடையில் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகளும் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவருமான நிஹாரிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அவர் சைதன்யாவை கடந்த 9ம் தேதி உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி குடும்பமே உதய்பூர் சென்று திருமண விழாவில் கலந்து கொண்டது. நடிகர் பவன் கல்யாண், ராம் சரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பிறகு ஐதராபாத் வந்து அங்கும் ஒரு திருமண வரவேற்பு விழா நடத்தினர். நிஹாரிகாவுக்கு சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. அப்போது அவருக்குச் செல்ல நாய்க் குட்டி ஒன்றை கணவர் சைதன்யா பரிசாக அளித்தார்.

அந்த படத்தை நிஹாரிகா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது கணவன் - மனைவி இருவரும் பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். விரைவில் இருவரும் தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளனர்.தேனிலவு பயணமாக எங்குச் செல்வது என்று அவர்கள் ஆலோசித்ததில் மாலத்தீவு தான் பொருத்தமான இடம் என்று முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காஜல் அகர்வால், கவுதம் கிட்ச்லு அங்குச் சென்று ஒரு மாதம் பிரச்சனை எதுவும் இல்லாமல் திரும்பி வந்தனர். அதுவே தங்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கும் என்று நிஹாரிகா முடிவு செய்துள்ளாராம். விரைவில் இருவரும் தேனிலவு புறப்பட உள்ளனர். நிஹாரிகா தனது கணவர் சைதன்யாவை சினிமாவில் ஹீரோவாக நடிக்கவும் பேசி வருகிறார் என்று கடந்த வாரம் தகவல் வெளியானது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வரவில்லை.

You'r reading காஜல் பாணியில் தேனிலவு திட்டமிட்ட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை