2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..?

by Chandru, Jan 12, 2021, 18:01 PM IST

தமிழில் புண்ணியவதி என்ற படத்தில் இளையராஜா இசையில் உனக்கொருத்தி, காதல் ரோஜாவே படத்தில் நினைத்த வரம் ஆகிய பாடல்களும் பத்ரி படத்தில் ரமண கோகுல இசையில் காதல் சொல்வது என்ற பாடலும் பாடியதுடன் தெலுங்கில் பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பல்வேறு இசை அமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பவர் சுனிதா. இவருக்கு 19 வயதாக இருக்கும் போதே கிரண் கோபுராஜூ என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். இவரது மகள் ஸ்ரேயா கோபு ராஜூ தற்போது பாடகியாக இருக்கிறார். இதற்கிடையில் கிரணுக்கும் சுனிதாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சுனிதாவுக்கு 42வயது ஆகிறது. இந்த வயதில் டிஜிட்டல் மீடியா சி இ ஓ ராம் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். ராமும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தைகள் இல்லை. ராம், சுனிதா இருவருக்குமே இது 2வது திருமணம் என்பதால் மிக எளிமையாக நடத்த முடிவு செய்தனர்.

சுனிதாவுக்கும் ராமிற்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சுனிதாவின் மகன், மகள் கலந்து கொண்டனர். இதுபற்றி சுனிதா கூறும் போது, எல்லா தாய்போல் நானும் எனது பிள்ளைகள் நன்கு செட்டிலாக ஆக வேண்டும் என்று என்ணியிருந்தேன். அதே சமயம் நல்ல குணமும், சிந்தனை திறனுள்ள பிள்ளைகளாக அவர்கள் இருப்பதால் நானும் வாழ்வில் செட்டிலாக வேண்டுமென்று எண்ணினார்கள். அதற்கான நேரம் வந்திருக்கிறது. ராம் என் வாழ்வில் வந்தார். எனக்கு நல்ல நண்பராகவும், நல்ல வாழ்க்கை துணைவராகவும் அமைந்தார் என்றார். டிசம்பர் மாதமே சுனிதா-ராம் திருமணம் நடக்கவிருந்தது. அவர்கள் புது வீடு கட்டி வந்ததால் அது முடிந்த பிறகு திருமணம் செய்ய எண்ணினார்கள். திட்டமிட்டப்படி புதுவீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் இவர்கள் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்க இந்து முறைப்படி நடந்தது.

சுனிதாவின் மகன், மகள் இருவரும் முன்னின்று தங்களது தாயின் 2வது திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்தி வைத்தனர். சுனிதா திருமண படங்கள் நெட்டில் வைரலானது. சுனிதாவின் திருமணத்தை அவர் பிள்ளைகளே ஏற்றுக் கொண்ட நிலையில் நெட்டிசன்கள் பலரும், விமர்சகர் ஒருவரும் சுனிதாவை திட்டித் தீர்த்திருக்கின்றனர். இதுபற்றி கூறிய திரைப்பட விமர்சகர் கதி மகேஷ், இலட்சியவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களில் சிலர், தனக்கு வயதுக்கு வந்த பெரிய மகள் இருக்கும்போது இரண்டாவது முறையாக எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று யோசித்திருப்பார்கள். குற்ற உணர்ச்சியை உணர்ந்து சோகமாக முகத்தை வைக்க வேண்டியிருக்கும் நிலையில் திருமணம் செய்து கொள்வதில் சுனிதா எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்வதன் மூலம் சமூகத்திற்கு என்ன செய்தி தருகிறார் என்று நறுக்கு தெறிக்க கேட்டிருக்கிறார். நெட்டிஸன்கள் சிலரும் சுனிதா திருமணத்தை கிண்டல் செய்திருக்கின்றனர்.

You'r reading 2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை