ரஜினியுடன் அண்ணாத்த இயக்குனர் திடீர் சந்திப்பு.. மீண்டும் ஷூட்டிங் தொடங்க ஆலோசனை..

by Chandru, Jan 30, 2021, 20:47 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்த நிலையில் கொரோனா ஊராடங்கு பிறப் பிக்கப்பட்டது. இதையடுத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சுமார் 8 மாத காலம் கொரோனா வழிகாட்டுதல்கள் கடுமை யாக பின்பற்றப்பட்டன. கொரோனா ஊரடங்கு தளர் வில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்கப்பட் டபோதும் மற்ற பல படங்கள் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அண்ணாத்த ஷூட்டிங் தொடங்க தாமதமாகி வந்தது.

இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு அதிகரித்தது. அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஜனவரி மாதம் தொடங்குவேன் அதற்கான தேதி முன்னதாக டிசம்பரில் அறிவிப்பேன் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 12 ம்தேதி ரஜினியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண் டார். பிறகு 13ம் தேதி அவர் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தினமும் 12 மணிநேரத்துக்கும் மேலாக ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார். இந்நிலையில் படப்பிடிப் பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியா னதால் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தத்தில் தொற்று இல்லை என்பது தெரிந்தது. ரத்த அழுத்த மாறுபாடுக்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் உடல் நிலை சீரானது. 3 நாள் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் சென்னை வந்தார். அரசியல் கட்சி அறிவிப்பார் என்று எதிர்பார்த்தநிலையில் உடல்நிலை கருதி நான் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். இதனால் அவரது ரசிகர்கள் மனம் உடைந்தனர். ரஜினியை அரசியலில் ஈடுபட கோரி வீட்டு முன்பும், வள்ளுவர் கோட்டம் அருகி லும் போராட்டத்தில் ஈடுபட் டனர். ஆனாலும் ரஜினிகாந்த் அதை ஏற்கவில்லை. என்னை அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

ரஜினியை கொரோனா கால கட்டத்தில் அது பரவும் சூழலில் செல்லாமல் வீட்டில் முழுஓய்வில் இருக்க டாக்டர் கள் அறிவுரை வழங்கினர். அதன்படி அவர் ஓய்வில் இருக் கிறார். அண்ணாத்த பட ஷூட்டிங் வரும் சட்டமன்ற தேர்தலுக்குபிறகு தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் மே மாதம் நடக்கும் என்று கூறப்படு கிறது. இந்நிலையில் அண்ணத்த படம் நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளி யாகும் என்று பட நிறுவனம் அறிவித்தது. இன்னும் படமாக்க வேண்டிய முக்கிய காட்சிகள் நிறைய இருப்ப தால் தேர்தலுக்கு முன்னதாக படப்பிடிப்பு தொடங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசுவதற்காக அண்ணாத்த பட இயக்குனர் சிவா, ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் நேரில் சந்தித்து பேசிய படங் கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பில் எடுத்த முடிவு பற்ற் தகவல் எதுவும் வெளியிடப் படவில்லை.
பட ரிலீஸ் தேதி அறிவிக்கப் பட்டதால் ரஜினிகாந்த் விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்க கூடும் என்று தெரிகிறது.

You'r reading ரஜினியுடன் அண்ணாத்த இயக்குனர் திடீர் சந்திப்பு.. மீண்டும் ஷூட்டிங் தொடங்க ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை