தனுஷ் பட ஒளிப்பதிவாளர் விவாகரத்து.. நடிகையை பிரிந்து வாழ்கிறார்..

by Chandru, Jan 30, 2021, 20:42 PM IST

நடிகர், நடிகைகள் சில சமயம் ஜோடியாக நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். மனமொத்து வாழ்பவர்கள் நிறைபேர் இருந்தாலும் மனக்கசாப்பால் திரும ணத்தை முறித்துக்கொண்டவர் களும் பலர் உள்ளனர்.

நடிகை ரேவதி ஒளிப்பதிவா ளர் சுரேஷ் மேனனை காத லித்து மணந்தார். 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி 8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் 2013ம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டப் படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதேபோல் நடிகை காவ்யா மாதவன், நிஷாக் சந்திரா என்பவரை 2009ம் ஆண்டு மணந்தார். குவைத் சென்று கணவருடன் வாழ்ந் தார், ஆனால் ஒரு வருடத்தி லேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவா கரத்து பெற்று பிரிந்தார். பின்னர் அவர் 2016ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை 2வது திருமணம் செய்து கொண்டார். திலீப்பும் ஏற்கன வே மஞ்சு வாரியரை மணந்து பின்னர் அவருடன் மனக் கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தவர் ஆவார். நடிகை அமலாபால் இயக்குன ஏ.எல்.விஜய்யை காதலித்து மணந்தார். 2 வருடத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதுபோல் இன்னும் சில ஜோடிகள் திருமணத்தில் இணைந்து பிறகு வாழ்க்கையில் பிரிந்துள்ளனர். தற்போது மற்றொரு ஜோடி விவாகரத் துக்கு தயார் ஆகி இருக்கிறது.

தனுஷ் நடிக்க கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி யவர் ஜோமன் டி ஜான். பிரபல ஒளிப்பதிவாளராக திரையுல கில் வலம் வந்துக்கொண்டிருக் கும் இவர் பணியாற்றிய பாவா கதைகள் சமீபத்தில் ஒடிடியில் வெளியிடப்பட்டது. இவர் மலையாள நடிகை ஆன் அகஸ்டின் காதலித்து வந்தார். ஆன் ஆகஸ்டின் மலையாளத் தில் அர்ஜுனன் சாக்‌ஷி, த்ரி கிங்க்ஸ், ஆர்டினரி, நீ நா ஆகிய மலையாள படங்கள் மற்றும் சோலோ தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். ஜோமன் டி ஜான், ஆன் அகஸ்டின் திருமணம் 2014ம் ஆண்டு நடந்தது. நடிப்பில் பல படங் களில் முன்னேறிக்கொண்டி ருந்த ஆன் திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந் ததால் மனச் சோர்வு அடைந் தார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு படங்களை மட்டுமே செய்துள்ளார். மறைந்த மலை யாள நடிகர் அகஸ்டினின் மகள்தான் ஆன், மலையா ளத்தில் சிறந்த நடிகைக்கான விருதையும் இவர் பெற்றிருக் கிறார்.

ஜோமன், ஆன் இருவருக்கும் இடையை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில கால மாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஜோமன் செமலா குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். இனியும் ஆன் உடன் திருமண வாழ்கையை தொடர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகை ஆனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஆன் தன்னுடைய மற்றும் தனது செல்லப்பிராணிகளின் புகைப் படங்களை மட்டுமே சமீப காலமாக வெளியிட்டு வருகி றார். ஜோமன் பற்றி எதுவும் பதிவிடுவதில்லை.

ஒளிப்பதிவாளர் ஜோமன் தற்போது இந்தியில் சர்க்கஸ் படத்தில் பணியாற்றி வருகிறார்.

You'r reading தனுஷ் பட ஒளிப்பதிவாளர் விவாகரத்து.. நடிகையை பிரிந்து வாழ்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை