சினிமா உதவி இயக்குனர் ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை

by Nishanth, Feb 8, 2021, 14:02 PM IST

மலையாள சினிமா உதவி இயக்குனர் ஆர். ராகுல் இன்று கொச்சியில் உள்ள ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக இருந்து வந்தவர் ராகுல் (33). இவர் தற்போது பிரபல நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் பிரம்மம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்தப் படத்தை ரவி கே. சந்திரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். சரத் பாலனின் திரைக்கதையில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாகக் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி உதவி இயக்குனர் ராகுல் மரடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை இவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. படப்பிடிப்புக்கு செல்ல நேரமானதால் படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் அவரது அறைக் கதவைத் தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து ஓட்டல் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் வேறு சாவியை எடுத்து திறந்து பார்த்த போது அறையில் ராகுல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து மரடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ராகுலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அறிந்த நடிகர் பிரித்விராஜ் உதவி இயக்குனர் ராகுலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வேண்டி தான் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ராகுலின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading சினிமா உதவி இயக்குனர் ஓட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை