விவசாயிகள் போராட்டம்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்க மியா கலீஃபா கோரிக்கை

by Sasitharan, Feb 8, 2021, 20:06 PM IST

டெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும் நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானா, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனா, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிடோரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவாக கருத்து தெரிவித்துவரும், நடிகை மியா கலீஃபா, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா சோப்ரா எந்த நேரத்தில் பேசப் போகிறார்? எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

பெய்ரூட் பேரழிவு அதிர்வுகளின் போது இருந்த ஷகிராவின் மவுனம் போல இது உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மியா கலீஃபா குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டம் குறித்து தற்போது பிரியங்கா சோப்ரா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக "எங்கள் விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்கள் நீக்கப்பட வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகம் என்ற வகையில், இந்த நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading விவசாயிகள் போராட்டம்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்க மியா கலீஃபா கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை