போதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..

by Chandru, Feb 26, 2021, 09:06 AM IST

நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களுரு போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல் நடிகை சஞ்சனா கல்ராணியும் போதை மருந்து தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டதில் சிலவிஷயங்களில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இதில் சஞ்சனாவுக்கு முதலில் ஜாமீன் கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகே ராகினி திக்கு ஜாமீன் கிடைத்தது.

சமீபத்தில் தனது ரசிகர்களுடன் ராகினி திவேதி இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது தான் அனுபவித்த போராட்டத்தைப் பற்றி வெளிப்படுத்தி கண்ணீர் விட்டு அழுதார்.அவர் கூறும்போது.சமையல் மற்றும் வேடிக்கையான வீடியோக்களை இடுகையிடுவதன் மூலம் நான் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன். எனது போராட்டத்தைப் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். சோஷியல் மீடியாவில் சிலரின் கருத்துக்களால் நான் காயம் அடைந்தேன்.​​என்னைப்பற்றி அல்லது என் குடும்பத்தின் மீது மலிவான கருத்துக்களை அனுப்புவதன் மூலம் ஒருவருக்கு என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆயினும்கூட, நான் அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு முன்னேறுகிறேன். நிச்சயமாக நான் அவர்களிடம் திரும்பிச் சென்று அவர்களின் கருத்து களைப் படிக்கச் சொல்ல விரும்புகிறேன். யாராவது குடும்ப உறுப்பினர்கள் மீது மலிவான கருத்துக்களை அனுப்பியிருந்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள்.நடந்த நிகழ்வுகள் பற்றி யோசித்தால் என்னால் இன்னும் தூங்கக் கூட முடியவில்லை. நான் பலமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள். நீங்களே உங்களை ஒருபோதும் கடிந்து கொள்ளாதீர்கள். உங்கள் அடையாளத்தைப் எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள்.இவ்வாறு ராகினி திவேதி கூறினார்.இந்நிலையில் ராகினி திவேதி மீண்டும் நடிக்க வருகிறார், வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. காமெடி கதையாக உருவாகும் கார்வா 3 என்ற கன்னட படத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து ராகினி கூறும் போது, 2020ம் ஆண்டு எல்லோருக்குமே சோதனை மிகுந்த ஆண்டாக அமைந்தது. சிலர் மிகக்கடுமையான கஷ்டங்களுக்குள்ளானார்கள். எனக்கு ஏற்பட்ட சோதனைகளால் நான் மனம் தளர்ந்து விடாமல் இன்னும் வலுவான, வெற்றிகரமானவாராக வெளிப்பட்டிருக்கிறேன். கார்வா 3 என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதுவொரு உணர்வுப் பூர்வமான கதை. காமெடி பின்னணியில் உருவாக உள்ளது. இதற்காக நான் என் தயார்ப்படுத்தலை ஏற்கனவே தொடங்கி விட்டேன் என்றார். இப்படத்தை புது இயக்குனர் விஷால் சேகர் இயக்க உள்ளார். திலக் மற்றும் கேக்னா கனோகர் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க உள்ளனர்.

You'r reading போதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை