ஆடம்பரமின்றி அமைதியாக ஆறுதல் கூறிய விஜய்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடி மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினரை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஜய்யும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading ஆடம்பரமின்றி அமைதியாக ஆறுதல் கூறிய விஜய்... Originally posted on The Subeditor Tamil
More Cinema News